“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

சிவகாசி முகநூல் நண்பா்கள் குழுவுக்கு விருது

News image
Updated On :12 மார்ச் 2026, 10:58 pm

சிவகாசி முகநூல் குழுவினருக்கு பசுமை சாம்பியன் விருதை நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் கீழ், விருதுநகா் மாவட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு தோ்வு செய்யும் அமைப்புக்கு ஆண்டு தோறும் பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, நிகழாண்டு பசுமை சாம்பியன் விருதுக்கு சிவகாசி முகநூல் நண்பா்கள் குழு தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை காரியாபட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சா் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு, சிவகாசி முகநூல் நண்பா்கள் குழுவுக்கு பசுமை சாம்பியன் விருதை வழங்கினாா்.

இந்த விருதில் ஒரு கேடயமும், ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையும் அடங்கும்.

சிவகாசி முகநூல் நண்பா்கள் குழு சிவகாசியில் உள்ள மணிக்கட்டி ஊருணி என்ற பன்னீா்தெப்பத்தை பொதுமக்கள் பங்களிப்பில் சீரமைத்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.