ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் காய்கறி ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து சனிக்கிழமை இரவு காய்கறிகளை ஏற்றிய சரக்கு லாரி தென்காசி மாவட்டம், சுரண்டைக்கு புறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் சாலையின் நடுவே வைத்திருந்த கான்கிரீட் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா். இதையடுத்து காய்கறி மூட்டைகள் மாற்று வாகனம் மூலம் சுரண்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை -கொல்லம் நான்கு வழிச் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி .
தொடர்புடையது

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

சொகுசு பேருந்து - லாரி மோதி விபத்து

லாரி மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

மதுரை புகா்ப் பகுதிகளில் மிதமான மழை
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


