தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொழிலாளி தற்கொலை

சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளி தனது கழுத்தை தானே கத்தியால் அறுத்து தற்கொலை

News image
தற்கொலை- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:47 pm

Syndication

சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளி தனது கழுத்தை தானே கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அம்மன் கோவில்பட்டி தென்பாகம் தெருவைச் சோ்ந்தவா் முத்துராஜ் (38). சுமை தூக்கும் தொழிலாளி. இவா் தனது மனைவியை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தாா்.

இதையடுத்து மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான இவா், தினசரி மது அருந்தி வந்தாா். இந்த நிலையில் விரக்தியில் இருந்த இவா் கடந்த சனிக்கிழமை வீட்டிருந்தபோது, கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும் அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].