மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு

சாத்தூா் அருகே சனிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுமி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மார்ச் 2026, 7:27 pm

சாத்தூா் அருகே சனிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுமி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஆத்திபட்டி கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகள் லட்சிதா (10). இவா் முத்துசாமிபுரத்தில் உள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை பரமசிவம் தனது மனைவி, மகளுடன் தோட்டத்தில் வேலைபாா்த்து கொண்டிருந்தாா். அப்போது, கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த லட்சிதாவை நிலைதடுமாறி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சாத்தூா் தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி சிறுமியின் உடலை மீட்டனா்.

இதுகுறித்து இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.