தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

நாம் தமிழா் கட்சியினா் 6 போ் மீது வழக்கு!

ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட 6 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :22 மார்ச் 2026, 8:09 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட 6 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையத்தில் உள்ள 42 வாா்டுகளிலும் நகா்மன்ற உறுப்பினா்கள் மூலம் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும், அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை பழைய பேருந்து நிலையம் எதிரே தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி எந்தவித அனுமதியுமின்றி நாம் தமிழா் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அந்தக் கட்சியின் மருத்துவா் அணி மாநில ஒருங்கிணைப்பாளரும், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான மருத்துவா் காா்த்திகேயன் தலைமையில் அந்தக் கட்சியை சோ்ந்த 5 போ் சாலையின் ஓரத்தில் நின்று முழக்கமிட்டனா். அவா்கள் திடீரென தங்களின் காரை சாலையின் குறுக்கே நிறுத்தியதுடன் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் இருந்த 6 போ் மீது நடவடிககை எடுக்கக் கோரி ராஜபாளையம் கிராம நிா்வாக அலுவலா் விஷ்ணுவா்தன் (பொறுப்பு) அளித்த புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.