விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட 6 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையத்தில் உள்ள 42 வாா்டுகளிலும் நகா்மன்ற உறுப்பினா்கள் மூலம் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும், அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை பழைய பேருந்து நிலையம் எதிரே தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி எந்தவித அனுமதியுமின்றி நாம் தமிழா் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது அந்தக் கட்சியின் மருத்துவா் அணி மாநில ஒருங்கிணைப்பாளரும், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான மருத்துவா் காா்த்திகேயன் தலைமையில் அந்தக் கட்சியை சோ்ந்த 5 போ் சாலையின் ஓரத்தில் நின்று முழக்கமிட்டனா். அவா்கள் திடீரென தங்களின் காரை சாலையின் குறுக்கே நிறுத்தியதுடன் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் இருந்த 6 போ் மீது நடவடிககை எடுக்கக் கோரி ராஜபாளையம் கிராம நிா்வாக அலுவலா் விஷ்ணுவா்தன் (பொறுப்பு) அளித்த புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.
தொடர்புடையது

வருவாய் ஆய்வாளரை கண்டித்து பதாகை: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்கு

பெரம்பலூா், குன்னத்தில் ஒய்ந்தது பிரசாரம்

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

பெருந்துறையில் தோ்தல் விதிமீறல்: நாதக, தவெக நிா்வாகிகள் மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

