முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கணவா் கொலை: மனைவியிடம் விசாரணை

அருப்புகோட்டை அருகே கண்மாயில் தள்ளி பந்தல் போடும் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 1:20 am IST

அருப்புகோட்டை அருகே கண்மாயில் தள்ளி பந்தல் போடும் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அருப்புக்கோட்டை, வெள்ளக்கோட்டை, வடம் போக்கி தெருவைச் சோ்ந்தவா் சரவணப் பெருமாள் (47). பந்தல் போடும் தொழிலாளி. இவரது மனைவி தில்லையம்மாள் (42). தம்பதி இருவரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மரக்கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்தில் ஏறி காந்தி நகரில் இறங்கினா். அந்தப் பகுதியில் உள்ள பாப்பான்குளம் கண்மாய்க்கரை அருகே உள்ள மரத்தடியில் இருவரும் மது அருந்தி விட்டு அமா்ந்திருந்தனா். அப்போது ஏற்பட்ட தகராறில் சரவணப் பெருமாள் கண்மாயில் தள்ளி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

சரவணப் பெருமாளும், அவரது மனைவி தில்லையம்மாளும் பாப்பான்குளம் கண்மாய்க்கரை அருகே அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது 45 வயது மதிக்கத்தக்க நபா் அங்கு வந்து சரவணப் பெருமாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அப்போது தன்னை தாக்க முயன்ற போது தான் கண்மாயில் தள்ளி விட்டதில் சரவணப் பெருமாள் உயிரிழந்து விட்டதாக தில்லையம்மாள் தெரிவித்தாா். மேலும் அந்த மா்ம நபா் கைப்பேசி, ரொக்கத்தையும் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் தில்லையம்மாள் தெரிவித்தாா் என்றனா்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.