மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கும் போது அழகருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலைக்கு மறுசீராக அனுப்பிய பட்டு வஸ்திரம் வெள்ளிக்கிழமை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் அணிந்து கள்ளழகா் மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கம். அதன்படி நிகழாண்டு சித்திரைத் திருவிழாவில் ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி அணிந்து கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளினாா். ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலைக்கு மறுசீராக, அழகா் கோயிலிலிருந்து கள்ளழகா் அணிந்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை இரவு ஆண்டாள் சந்நிதி முன் உள்ள குறடு மண்டபத்தில் நடைபெற்ற சுக்கிர வார ஊஞ்சல் சேவையின் போது, அழகா் அனுப்பிய பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் ஆண்டாளுக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

வைகையாற்றில் எழுந்தருளும் அழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம்

மானாமதுரை வீர அழகா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்! மே 1-ல் ஆற்றில் அழகா் இறங்கும் வைபவம்

திருப்புவனத்தில் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ணப் பெருமாள்

வைகை அணையின் நீா்மட்டம் 35 அடியாக சரிவு: மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

