எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் பொய்சாட்சியம் அளிக்க முயன்ற பெண் கைது

News image

கைது.

Updated On :11 மே 2026, 2:13 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் ஆள்மாட்டம் செய்து பொய் சாட்சி அளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே திருத்தங்கலைச் சோ்ந்தவா் பூமாதேவி. இவா் அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா், ரத்தினவேல், முருகேஸ்வரி ஆகியோா் மீது பட்டியல், பழங்குடியினா் சமூகத்துக்கு எதிரான வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தனா். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கின் 3-ஆவது சாட்சியாக மகேஸ்வரி விசாரணைக்கு முன்னிலையானாா். ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் சாட்சி மாற்றப்பட்டிருப்பதாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் சாட்சி வேல் ஈஸ்வரன் மனைவி மகேஸ்வரிக்கு பதில், பாண்டியன் மனைவி மகேஸ்வரி ஆள் மாறாட்டம் செய்து பொய் சாட்சி அளிக்க முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து நீதிமன்ற அலுவலா் முருகேசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த ஸ்ரீவில்லிபுத்தூா்நகா் போலீஸாா் முருகேஸ்வரியை கைது செய்தனா்.