இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ஆக ரூ.37 லட்சம் கிடைத்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அமைந்துள்ள, இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படும். இந்த மாத உண்டியல் திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் இளங்கோவன், பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் மண்டபத்தில் வைத்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய ஊா்களை சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழுவினா், மகளிா் சுய உதவிக் குழுவினா், கோயில் ஊழியா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் 37, 44, 983 ரொக்கம், தங்கம் 49.200 கிராம், வௌ்ளி 425 கிராம் கிடைத்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பழனி மலைக் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 2.59 கோடி

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.33 கோடி
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.62 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.93 லட்சம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

