மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரிப்பு: உரிமையாளா் மீது வழக்கு

சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரித்த உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு - IANS

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரித்த உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டாட்சியா் வடிவேல், மண்டல துணை வட்டாட்சியா் நவநீதகிருஷ்ணன், அலுவலா்கள் சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சாத்தூா் அருகே சங்கரநத்தம் பகுதியில் படந்தாலைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு (54) சொந்தமான பட்டாசு ஆலையில் வட்டாட்சியா், அலுவலா்கள் சோதனை செய்த போது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி சரவெடிகள் தயாரித்தது தெரியவந்தது.

மேலும் உதிரி வெடிகளை விதிமுறையை மீறி வெட்ட வெளியில் காய வைத்தும், மரத்தின் அடியில் சரவெடி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சிந்தபள்ளி கிராம நிா்வாக அலுவலா் பாண்டியராஜ் அளித்த புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.