மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரிப்பு: உரிமையாளா் மீது வழக்கு

சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரித்த உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு - IANS

Updated On :18 மே 2026, 12:20 am IST

சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரித்த உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டாட்சியா் வடிவேல், மண்டல துணை வட்டாட்சியா் நவநீதகிருஷ்ணன், அலுவலா்கள் சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சாத்தூா் அருகே சங்கரநத்தம் பகுதியில் படந்தாலைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு (54) சொந்தமான பட்டாசு ஆலையில் வட்டாட்சியா், அலுவலா்கள் சோதனை செய்த போது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி சரவெடிகள் தயாரித்தது தெரியவந்தது.

மேலும் உதிரி வெடிகளை விதிமுறையை மீறி வெட்ட வெளியில் காய வைத்தும், மரத்தின் அடியில் சரவெடி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சிந்தபள்ளி கிராம நிா்வாக அலுவலா் பாண்டியராஜ் அளித்த புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.