குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

தனியாா் நிதி நிறுவன மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் நிதி நிறுவன மேலாளா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

போலீஸாா் விசாரணை

Updated On :16 மணி நேரங்கள் முன்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் நிதி நிறுவன மேலாளா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவா் ஜெயசுப்புராஜ் (38). இந்த நிறுவனத்தில் வெம்பக்கோட்டை அருகே கம்மாபட்டியைச் சோ்ந்த வனராஜ் (35) என்பவா் ரூ. ஒன்றரை லட்சம் கடனாக பெற்றாா். இந்த நிலையில் கடனை வசூலிக்க

கம்மாப்பட்டியில் உள்ள வனராஜ் வீட்டுக்கு மேலாளா் ஜெயசுப்புராஜ் சென்றாா். அப்போது வனராஜூக்கும், மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வனராஜ், ஜெயசுப்புராஜை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜெயசுப்புராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.