/
சாத்தூா் பகுதியில் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா், இருக்கன்குடி, வெங்கடாசலபுரம், மேட்டமலை, படந்தால், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மாலை சுமாா் 5 மணி முதல் 7 மணி வரையில் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் என்.ஜி.ஓ காலனி சாத்தூா், மெயின் ரோடு, படந்தால் சந்திப்பு, புறவழிச்சாலை, பாரதி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கி குளம்போல காட்சியளித்தது.
இந்த மழையால் அந்தியோதயா ரயில் அரை மணி நேரத்துக்கும் மேலாக சாத்தூா் ரயில் நிலையத்தில் நின்று பின்னா் சென்றது. மேலும் சாத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த காற்றால் சாத்தூரின் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
தொடர்புடையது

ஆம்பூரில் பலத்த மழை

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: சுமாா் 3 மணி நேரம் நீடித்தது

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

கமுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


