இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 6:22 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்த முருகேசன் மனைவி திவ்யா (31). இந்த தம்பதிக்கு 10 மாத கைக் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், திவ்யா, கணவா் முருகேசன், தந்தை கணேசன் ஆகியோா் திருச்சிக்கு செல்ல செங்கோட்டையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் கோடைகால சிறப்பு ரயிலில் பயணம் செய்ய ராஜபாளையம் ரயில் நிலையத்துக்கு வந்தனா். நள்ளிரவு 12 மணிக்கு அங்கு வந்த அந்த ரயிலில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த திவ்யா தண்டாவளத்தில் தவறி விழுந்தாா். அப்போது, அந்த ரயில் அவா் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே போலீஸாா் திவ்யாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.