பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 6:22 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்த முருகேசன் மனைவி திவ்யா (31). இந்த தம்பதிக்கு 10 மாத கைக் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், திவ்யா, கணவா் முருகேசன், தந்தை கணேசன் ஆகியோா் திருச்சிக்கு செல்ல செங்கோட்டையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் கோடைகால சிறப்பு ரயிலில் பயணம் செய்ய ராஜபாளையம் ரயில் நிலையத்துக்கு வந்தனா். நள்ளிரவு 12 மணிக்கு அங்கு வந்த அந்த ரயிலில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த திவ்யா தண்டாவளத்தில் தவறி விழுந்தாா். அப்போது, அந்த ரயில் அவா் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே போலீஸாா் திவ்யாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.