பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகளில் மாணவ, மாணவியரை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று முகாம் நடத்துவது வழக்கமாக இருக்கிறது. அந்த வெளியூர் முகாம்களில் பலவித நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மருத்துவமுகாம், ரத்த தான முகாம், எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி முகாம் என்று பலவித முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதில் சுற்றுச் சூழல் முகாமும் ஒன்று. இந்தச் சுற்றுச் சூழல் முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் எடுக்கும் வேலையைத்தான் தற்போது செய்து வருகிறேன். பனியன் தொழிற்சாலையில் கட்டிங் மாஸ்டர் வேலையை விட்டுவிட்டுவிட்டேன்.