மதுரையில் கட்டட வேலை செய்து கொண்டிருந்த ஒருவரின் மகளுக்கு மேற்படிப்புக்கு உதவி செய்தோம். அந்தக் கட்டடத் தொழிலாளி ஒரு விபத்தில் கால்களை இழந்துவிட்டவர். அந்தத் தொழிலாளியின் மனைவி அவரையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு, வீட்டை விட்டுப் போய்விட்டார். அவருடைய குழந்தைகளைக் காப்பாற்ற பிச்சையெடுப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. இவ்வளவு கஷ்டத்திலும் அவர் தனது மகளைப் படிக்க வைத்தார். அவருடைய மகள் மீனா மதுரை, சின்ன சொக்கிகுளத்தில் உள்ள காக்கைபாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்தார். அவர் மாவட்ட அளவில் 3 வது ரேங்க் எடுத்தார். புவியியல் படிப்பில் மாநிலத்தில் முதலாவதாகத் தேறினார். இதைக் கேள்விப்பட்டு அவருக்கு நாங்கள் இந்த ஆண்டு மேற்படிப்பிற்காக உதவி செய்திருக்கிறோம். நாங்கள் உதவி செய்ததைக் கேள்விப்பட்டு மதுரை ஆட்சியர் அவர்களுக்கு வீட்டு வசதி வாரிய வீடு கிடைக்க உதவி செய்திருக்கிறார்.