பாதுகாப்பான தீபாவளி!

பட்டாசு வெடிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை: பட்டாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடைகளை அணியுங்கள்.  முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள். பெரியவர்கள் மேற்பார்வையிலேயே குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்
பாதுகாப்பான தீபாவளி!
Updated on
1 min read
  • பட்டாசு வெடிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
  • பட்டாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடைகளை அணியுங்கள்.  முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
  • பெரியவர்கள் மேற்பார்வையிலேயே குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
  • சட்டைப் பையில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு வெடிக்கக் கூடாது.
  • வெடிக்காத பட்டாசுகளை எக்காரணத்தைக் கொண்டும் கையில் எடுக்கக்கூடாது.
  • பட்டாசுகளை வீட்டிற்கு வெளியில்தான் வெடிக்க வேண்டும்.காலியான மைதானத்தில் வெடிப்பது கூடுதல் பாதுகாப்பு.
  • ராக்கெட் போன்ற வாணவேடிக்கைகளைக் குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்கவும்.
  • வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்காதீர்கள்.
  • ஒரு வாளி நீரை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொண்டேதான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  • எல்லாப் பட்டாசுகளையும் நீண்ட வத்தியாலேயே கொளுத்தி வெடிக்க வேண்டும்.
  • எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீப்பிடித்துக் கொண்டால் ஓடாதீர்கள்.  உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள்  அல்லது கீழே படுத்து உருளுங்கள்.
  • தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள்.  இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்.  உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com