இத்தலம், தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றதாம். நடராஜர் சந்நிதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம். நடராஜர் சந்நிதிக்கு மிக அருகில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி கொண்டிருப்பது மிக விசேஷமான ஒன்று. பிரம்மாண்டமான சிவத்தலமான இது, கோயில் கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இறைவன் இங்கே, நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருவமாகவும் அருள்பாலிக்கிறார்.