""பத்தாம் வகுப்பில், பிளஸ் டூ வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. மருத்துவம் படித்து டாக்டராக முடியவில்லை என்றாலும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் நிறைய இருக்கின்றன. பத்தாம் வகுப்பில் மிகக் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மருத்துவம் சார்ந்த பட்டயப் படிப்புகளில் சேரலாம். நர்ஸிங் எய்டி, டென்டல் அஸிஸ்டென்ஸ், மெடிக்கல் ரிகார்ட் சைன்ஸ், ரேடியாலஜி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி, கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி, ஆக்ஸிடென்ட் அண்ட் எமர்ஜென்ஜி கேர் டெக்னாலஜி, ஆப்ரேஷன் தியேட்டர் அண்ட் அனஸ்திஸ்யா டெக்னாலஜி என்று நிறையப் படிப்புகள் உள்ளன. இன்று மருத்துவத்துறையில் உள்ள பல கருவிகளைத் திறம்பட இயக்குவதற்கு பல மருத்துவமனைகளில் திறமையான ஆட்கள் இல்லை. இதே படிப்புகளில் பட்டப் படிப்புகளும் உள்ளன. உதாரணமாக பி.எஸ்சியில் கார்டியாக் டெக்னாலஜி, டயலிஸிஸ் டெக்னாலஜி, ரேடியோ தெரபி டெக்னாலஜி போன்று 15 க்கும் அதிகமான படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு பிளஸ் டூ வில் குறைந்த பட்சம் 40% மதிப்பெண்களும், பத்தாம் வகுப்பில் 35 % மதிப்பெண்களும் பெற்றிருந்தாலே போதும். நிறையப் பேருக்கு இது தெரியாமல் இருக்கிறது'' என்ற அவரிடம், பொறியாளராக ஆக வேண்டும் என்று கனவு கண்டு குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் என்ன செய்யலாம்? என்று கேட்டோம்.