வடநாட்டில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நேரத்தில் தில்லி, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த "கன்வாரிகள்' என்றழைக்கப்படும் சிவபக்தர்கள் நடந்தே சென்று ஹரித்துவார் அருகே "கோகுக்' என்ற பகுதியிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வருவது வழக்கம். தமிழகத்தில் காவடி எடுப்பவர்கள் தோளில் சுமப்பது போன்று நீளமான கம்பில் இரு முனைகளிலும் சிறிய குடங்களைக் கட்டிக் கொண்டு அதில் கங்கை நீரை நிரப்பி வருவதை "கன்வார்' என்று குறிப்பிடுவதுண்டு. அதைச் சுமப்பவர்களுக்கு "கன்வாரிகள்' என்ற பெயர் ஏற்பட்டது.