ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ளது பென்ஜிலாக் என்ற நிறுவனம். இது ஒரு வித்தியாசமான பூட்டைத் தயாரித்து உள்ளது. பெயர்: பென்ஜிலாக் டிஎஸ்ஏ ஃபிங்கர்பிரிண்ட் பேட் லாக்.
பயணம் செய்யும் போது நாம் பயன்படுத்தும் ட்ராவல் பேக்கில் பயன்படுத்தக் கூடிய இந்தப் பூட்டைத் திறக்க சாவி தேவையில்லை. உங்களுடைய விரல் ரேகைதான் இந்தப் பூட்டுக்குச் சாவி.
அப்படியானால் ஒரே ஒருவர் மட்டுமேதான் இந்தப் பூட்டைப் பயன்படுத்த முடியுமா? என்ற ஐயம் ஏற்படக் கூடும். இந்தப் பூட்டில் ஐந்து நபர்களின் கை ரேகைகளைப் பதிவு செய்து கொள்ள முடியும்.
ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்த இப்போது விரல் ரேகை பயன்படுத்தப்படுவதைப் போல இந்தப் பூட்டின் ஓர் இடத்தில் விரலை வைத்தால் போதும். விரலை வைக்கும் போது எல்இடி விளக்கு வெளிச்சம் தோன்றும்.
இந்தப் பூட்டை விமானப் பயணங்களின் போது பயன்படுத்தும் ட்ராவல் பேக்குகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
கடினமான ஸ்டீலால் செய்யப்பட்டுள்ள இந்தப் பூட்டில் லித்தியம் அயர்ன் பேட்டரி உள்ளது. இதை ரீ சார்ஜ் செய்து கொள்ள முடியும். 6 செ.மீ. நீளமுள்ள யுஎஸ்பி கேபிளைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பூட்டின் மேற்பூச்சாக குரோமியம் பூசப்பட்டுள்ளது.
ஐந்து நபர்களின் விரல் ரேகையைப் பதிவு செய்து கொண்டு பூட்டைத் திறக்கலாம்; பூட்டலாம் என்றால் வேறு யாராவது விரல் ரேகையைப் பதிவு செய்ய முடியாதா? என்று கேட்கத் தோன்றும். அப்படி எல்லாம் எளிதாகப் பதிவு செய்துவிட முடியாது. இந்த பூட்டில் உள்ள கீ பேடில் முதலில் பூட்டை உயிர்ப்பிப்பதற்கான ரகசிய குறியீட்டு எண்ணைப் பதிய வேண்டும். அப்போதுதான் இந்தப் பூட்டைப் பயன்படுத்தும் விரல் ரேகையைப் பதிவு செய்ய முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்

நீட் மறுதேர்வு வினாத்தாள் கடினமாக இருக்குமா? எல்லாம் ஊகங்கள்தான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



