தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிலம்பம்...  உலக சாதனை!

சிலம்பம் தமிழ்நாட்டில் உருவான கலை. உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்ககூடியது சிலம்பக் கலையாகும். 

News image
Updated On :14 நவம்பர் 2021, 6:00 am IST


சிலம்பம் தமிழ்நாட்டில் உருவான கலை. உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்ககூடியது சிலம்பக் கலையாகும். சிலம்பம் குறித்து இளையதலைமுறையினருக்கு தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊர்களில் சிலம்பப் பயிற்சிக் கூடங்கள் உள்ளன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், தொடந்து 24 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர். இச்சாதனை குறித்து உதவித் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""எங்கள் பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 32 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பொதுமுடக்கத்தினால் பள்ளி மாணவர்கள் உற்சாகம் இழந்துவிடக்கூடாது என அவர்களுக்கு சிலம்பப் பயிற்சி அளிக்க முடிவு செய்தோம். தொடந்து கடந்த ஆறு மாத காலமாக சிலம்பப் பயிற்சியை நான் அளித்தேன்.

ஏற்கெனவே கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு தினேஷ்குமார் என்பவர் இலவசப் பயிற்சி அளித்து வருகிறார். எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் 25 பேரைத் தேர்வு செய்து, ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்சி அளித்தோம்.

தினசரி காலையில் இரண்டு மணி நேரம் பயிற்சி அளித்து வந்தோம். இந்நிலையில் பயிற்சி பெறும் 25 மாணவர்களை வைத்து 24 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்யலாம் என முடிவு செய்தோம். இது குறித்து "டிரம்ப் வேர்ல்டு ரெக்கார்டு' தென் மண்டல ஒருங்கினைப்பாளர் பி.எம்.சம்பத்குமாருக்குத்தகவல் அளித்தோம்.

பின்னர் அவர் பள்ளிக்கு வந்து மாணவர்கள் தொடந்து 24 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றியதைப் பார்த்தார். தொடந்து அவர் கிராம மக்கள் முன்னிலையில் சாதனை செய்யக் கூறினார்.

பின்னர் பள்ளி வளாகத்தில் அக்டோபர் 27 -ஆம் தேதி மாலை 4 மணி முதல் அக்டோபர் 28 -ஆம் தேதி மாலை 4 மணி வரை மாணவர்கள் தொடந்து 24 மணி நேரம் சிலம்பம் சுற்ற ஏற்பாடு செய்யப்பட்ட து.

கிராமமக்கள் முன்னிலையில் 25 மாணவ மாணவிகள் தொடந்து 24 மணிநேரம் சிலம்பம் சுற்றும் சாதனையை தொடங்கினார்கள். முதலில் 25 பேர் இரண்டு மணிநேரமும், பின்னர் இரண்டு இரண்டுபேராக 30 நிமிடமும், பின்னர் எட்டு எட்டு பேராக மூன்று பிரிவாக 30 நிமிடம் சிலம்பம் சுற்றினார்கள்.

இறுதியில் 25 பேரும் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி நிறைவு செய்து உலக சாதனை படைத்தனர்.

இதில் மாணவர்கள் சிலம்பத்தில் உள்ள பிரிவுகளான நெடுங்கம்பு, நடுங்கம்பு, இரட்டைகம்பு, சுருள்வாள், தீப்பந்தம், குத்துவரிசை ஆகிய பிரிவுகளில் சிலம்பம் சுற்றிச் சாதனை புரிந்தனர். தொடர்ந்து "டிரம்ப் வேர்ல்டு ரெக்கார்டு' நிறுவனத்தின் செயல் அலுவலர் முக்தாபிரதாப், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.எம்.சம்பத்குமார் ஆகியோர் மாணவர்களின் சாதனையை ஏற்றுக் கொண்டு உலக சாதனை என சான்று அளித்தனர்.

ஆசிரியர்கள் நினைத்தால் மாணவர்களைச் சாதனையாளராக்கிவிடலாம் என்பதற்கு இது ஒரு சான்றாகும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.