பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குதிரைப் பந்தயம்!

குதிரையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள்  எகிப்தியர்கள்.

News image
Updated On :17 ஏப்ரல் 2022, 12:30 am

DIN

குதிரையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள்  எகிப்தியர்கள்.

குதிரையை சரியான முறையில் பழக்கி தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப  செயல்பட வைத்தவர்  சிவப்பிந்தியர்கள்.

குதிரையைப் போர்களுக்குப் பயன்படுத்திய பெருமை இந்திய அரசர்களைச் சாரும்.  பின்னர், உலக நாடுகள்  குதிரையை விளையாட்டுகளுக்கு  பயன்படுத்தத் தொடங்கின.  இதன் விளைவாகத் தோன்றியதுதான்  குதிரைப் பந்தயங்கள்.

எகிப்து,  பாபிலோனியா,  சிரியா போன்ற  நாடுகளில்   குதிரைப் பந்தயம் பிரசித்திப்பெற்றது.

முதன்முதலாக  குதிரைப் பந்தயம்  இங்கிலாந்து  நாட்டில்  12-ஆம் நூற்றாண்டில்  நடத்தப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, அரேபியா, துருக்கி,  பெர்சியா ஆகிய  நாட்டு வணிகர்கள்  குதிரைகளை  இறக்குமதி  செய்து பந்தயத்திற்குப் பயன்படுத்தினர்.  அரேபியா நாட்டுக் குதிரைக்கு  மவுசு  அதிகம்.

குதிரைப் பந்தயத்திற்காக   சட்டங்கள்  1751-ஆம் ஆண்டு இயற்றப்பட்டன.  1798 - ஆம் ஆண்டு குதிரைப் பந்தயம்  குறித்த முதல் செய்தித்தாள் வெளியானது.18-ஆம் நூற்றாண்டில்  இங்கிலாந்தில்  குதிரைப் பந்தயம்  மிகவும்  முக்கிய  இடத்தைப்  பிடித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.