டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கடிதத்தை  படித்தாயா?

அந்தச் சிறுவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே ஆசிரியரிடம் சண்டை போட்டு பள்ளியை விட்டு நின்று விட்டான்.

News image
Updated On :13 மார்ச் 2022, 12:30 am

வி.ந.ஸ்ரீதரன்


அந்தச் சிறுவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே ஆசிரியரிடம் சண்டை போட்டு பள்ளியை விட்டு நின்று விட்டான்.

கவலையடைந்த அவனது தாயார் கடிதம் ஒன்று எழுதி அந்தச் சிறுவனிடம் கொடுத்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தன் உறவினரிடம் அனுப்பினார்.

கடிதத்தை படித்த உறவினர், "கடிதத்தை படித்தாயா?' என்று சிறுவனைக் கேட்டார்.

"பிறருக்கு கொடுத்த கடிதங்களை நான் படிப்பதில்லை' என்றான் அந்தச் சிறுவன்.

"படித்துப்பாரு' என்று அவனிடமே கொடுத்தார் அவர்.

"சமுதாயத்தையே திருத்துகிற நீங்கள் என் மகனையும் திருத்தி நல்லபடி கொண்டு வாருங்கள்' என்று எழுதியிருந்தது.

அந்தச் சிறுவன்தான் பின்னாளில் சமுதாய மாற்றத்திற்காக எழுதி எழுதிக் குவித்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.