கம்போடியாவின் ஓட்டார் மினச்சே மாகாணத்துக்கும், தாய்லாந்தின் சுரின் மாகாணத்துக்கும் இடைப்பட்ட எல்லையில் ஒரு சிவன் கோயில் உள்ளது. இதை கம்போடிய வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்தக் கோயிலுக்கு கெமர் மக்கள் வருகை தந்து வணங்குகின்றனர்.
அருகருகே மூன்று கோயில்கள் இருந்தாலும், சிவன் கோயில் பெரியது. இதனை 'பிரசாத் தா
முயன்தோம்' என அழைக்கின்றனர். கோயில் செவ்வக வடிவில் சிவப்பு மணற்கற்களால் எழுந்துள்ளது. பிரதான நுழைவு வாயில் தெற்கு நோக்கி உள்ளது. கெமர் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு பார்த்திருக்கும். ஆக இது இந்து கோயில்தான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இருந்தாலும், கோயிலால் இரு நாடுகளுக்கு இடையே அவ்வப்போது எல்லைப் பிரச்னையும் இருக்கவே செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.