'என்னப்பா... பெண்ணை நல்லா பார்த்துக் கொள்வாயா?'
'சந்தேகம் இருந்தா அவ தங்கச்சியையும் சேர்த்து அனுப்புங்க!'
'உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் போது நீங்கள் மனைவியிடம் மனம் விட்டுப் பேச வேண்டும்...'
'யார் மனைவியிடம் டாக்டர்?'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'வீட்டோட மாப்பிள்ளையா போனது தப்பாப்போச்சுன்னு எதைவச்சு சொல்றே?'
'நான் அவங்க வீட்டுக்குப் போனதும் சமையல்காரர், தோட்டக்காரங்களை எல்லாம் வேலையைவிட்டு நிறுத்திட்டாங்க!'
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
'இந்த ஊர்ல, இது பேர் போன ஹோட்டல்!'
'அதான், நேம் போர்டைக் காணோமா?'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'டாக்டர்... கால்ல ஆபரேஷன் முடிஞ்சு நான் நல்லா நடந்தபிறகுதான் ஃபீஸ் தருவேன்...'
'அது நடக்காத காரியம்!'
'எனக்குதான் சுகர் இல்லையே... அப்புறம் ஏன் காபில சர்க்கரை போடாமக் கொடுக்கிறே?'
'வீட்டுல சுகர் இல்லைங்க!'
-தீபிகா சாரதி, சென்னை.
'டீக்கடை பெஞ்சில் படுத்து ஏன் தூங்குறே?'
'கடை ஓபன் ஆனதும் பெட் சாயா குடிக்க!'
'இவள் உன் அத்தை பெண்ணா... மாமன் மகளா?'
'என்னை மாமான்னு கூப்பிடும் அத்தை மகள்!'
'பூஜ்ஜிய தோசை ஒன்று போடு...'
'அப்படி ஒரு தோசையே கிடையாதே!'
'அட... முட்டை தோசையை சொன்னேன்.'
'இலைக்கு முன்னால் ஒரு கொட்டாங்கச்சியை ஏன் வச்சிட்டுப் போறார்?'
'அதில் இளநீர் பாயசம் ஊற்றுவாங்க!'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
'குடிச்சிட்டு வீட்டுக்குப் போனா என் மனைவி ரொம்ப பொல்லாதவளா மாறிடுவா!'
'மற்ற நேரங்கள்ல ..?'
'சுமார் பொல்லாதவ!'
'உங்க ஹஸ்பென்ட் நடு இரவுல சிரிக்கிறது உங்களுக்கு எப்படி மேடம் தெரியும்?'
'அக்கம் பக்கத்துல உள்ளவங்களே கதவைத் தட்டிக்கேட்கும்போது எனக்கு எப்படி டாக்டர் தெரியாம இருக்கும்?!'
'காலம் எப்படி மாறிப் போச்சுப் பாருங்க...?'
'என்ன விஷயம்?'
'எதிர் வீட்டுல புருசனும் பொண்டாட்டியும்தான் இருக்காங்க. அதைப் போய் ஜாயிண்ட் ஃபேமிலின்னு சொல்லிக்கிறாங்க!'
'படத்துல அப்படி என்னதாங்க சஸ்பென்ஸ் இருக்கு?'
'ஏழெட்டு தடவைப் பார்த்தால்கூட கதை என்னன்னு யாருக்குமே புரியாது, சார்!'
'மகாலட்சுமி தாயி...'
'இருந்த பழைய சாதத்தை ஐயாவுக்குப் போட்டு ஆபீசுக்கு அனுப்பிட்டேன். நீ கொஞ்சம் வெய்ட் பண்ணுப்பா... சூடா பூரி பொரிக்கப் போறேன், தர்றேன்!'
'தப்பு செய்தவங்க தான் பொண்டாட்டிக்குப் பயப்படுவாங்க... நீங்க என்ன தப்பு செஞ்சீங்க?'
'உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதைத் தவிர நான் வேற எதுவுமே செய்யலைம்மா!'
'சின்ன பையன் பார்மசி வச்சு ஓஹோன்னு இருக்கான்!'
'மருந்துக்குக் கூட படிப்பு வரலைன்னு வருத்தப்படுவீங்களே... அந்த பையனா சார்?'
'நாம பிச்சைக்காரர்கள்னு அந்த சர்வருக்கு தெரிஞ்சிடக்கூடாதுப்பா!'
'ஏண்ணே?'
'தெரிஞ்சிட்டா, டிப்ஸ் அதிகமா எதிர்பார்ப்பாங்க!'
'நீ கோபப்படாமல் இருந்தா எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா?'
'எதையாவது பேசி என் கோபத்தைக் கிளறாதேய்யா!'
-வி.ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







