பேல்பூரி
மனிதனின் பாதி வாழ்க்கை போனிலும், மீதி வாழ்க்கை லோனிலும் கழிகிறது.
கண்டது...
(திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஒரு நகரின் பெயர்)
'கணவன்-மனைவி நகர்.'
-வீ.இரா.இராசராசன், செங்குறிச்சி.
(நெல்லை களக்காடு பெல்ஜியம் ஆஸ்பத்திரியில் வாசலில் எழுதி வைத்திருக்கும் வாசகம்)
'இந்தியாவுக்கு வந்தாரு வாஸ்கோடகாமா...
நீங்க ஆஸ்பத்திரிக்கு மாஸ்க்கோட வாமா!'
-ராஜேஸ்வரி சுப்பிரமணியன், நெல்லை.
(திருவள்ளூரில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)
'வாழ்க்கைத் திருப்பங்களில் கவனம்...
வஞ்சகர்கள் அதிகம்!'
-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
(கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கால் டாக்சி ஒன்றில் கண்ட வாசகம்)
'அதிவேகம் ஆம்புலன்சுக்கு வழிவகுக்கும்...
மிதவேகம் சேருமிடம் சேர்க்கும்!'
-ஸ்ரீனிவாச பிரபு, கோவை.
(நெல்லையில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)
'மனிதனின் பாதி வாழ்க்கை போனிலும், மீதி வாழ்க்கை லோனிலும் கழிகிறது.'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
எஸ்.எம்.எஸ்.
'பணத்துக்காக வரும் அன்பு செலவாகும் வரை...
தேவைக்காக வரும் அன்பு காரியம் முடியும் வரை!'
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
யோசிக்கிறாங்கப்பா...
'குழப்பம் என்பது பிறரால் வந்தாலும்...
தெளிவு என்பது உன்னிடமே இருக்கவேண்டும்.'
-த.பாலசுப்பிரமணியன், கோவை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




