மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

சங்கரய்யா நல்லகண்ணு - நூற்றாண்டு கண்ட செஞ்சட்டை போராளிகள்

நூற்றாண்டு கண்ட செஞ்சட்டை போராளிகளான சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோர் குறித்து சுருக்கமாக விவரிக்கிறது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2026, 6:55 pm IST

சங்கரய்யா நல்லகண்ணு-நூற்றாண்டு கண்ட செஞ்சட்டை போராளிகள்- ஜெகாதா; பக்.204; ரூ.215; ஸ்ரீபாரதி பப்ளிகேஷன்ஸ்; சென்னை-600033. ✆ 99523 35505.

நூற்றாண்டு கண்ட செஞ்சட்டை போராளிகளான சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோர் குறித்து சுருக்கமாக விவரிக்கிறது. சுதந்திரம், மக்கள் உரிமை, தொழிலாளர் நலன், வறுமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என பலவற்றில் களமாடிய தோழர் சங்கரய்யா, சமூகத்துக்கு அளித்த பங்களிப்பை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது.

சுயமரியாதை இயக்கம் மீது ஈடுபாடு கொண்டிருந்த அவர், 17 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் உருவாக முக்கிய காரணியாக இருந்தவர் என அவரைப் பற்றி விவரித்துக் கொண்டே போகலாம்.

அதேவேளையில், 15 வயதில் பொதுவுடைமை கொள்கையால் ஈர்க்கப்பட்டு, 18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர் நல்லகண்ணு. 100 வயதைக் கடந்தாலும், உடல்நிலை ஒத்துழைத்திருந்தால் மக்களுக்காக போராட்டக் களத்தில் நின்றிருக்கக் கூடிய உன்னத தலைவர் அவர். அவரின் தியாக வாழ்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டி கூறிய வார்த்தைகளை எவராலும் மறுக்க முடியாது.

'திராவிட இயக்கம் தோன்றாதிருந்தால், பெரியாரும் அண்ணாவும் இல்லாமல் போயிருந்தால், நான் நல்லகண்ணு மற்றும் சங்கரய்யா அருகில் கம்யூனிஸ்ட்டாக அமர்ந்திருப்பேன்' என்பது

கருணாநிதி சொன்ன வார்த்தைகள். அவரின் வார்த்தைகள் இருவரும் எந்த அளவுக்கு ஒப்பற்றத் தலைவர்கள் என்பதை புரிந்துகொள்ள மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

'சமூக வேள்வியில் சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் தவிக்கும் மக்களை விடுவிக்க, ஒவ்வொரு தேசத்திலும் சில விடிவெள்ளிகள் தோன்றுவர். அவர்களில் ஒருவர்தான் சங்கரய்யா' என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மட்டுமல்ல ஐயா நல்லகண்ணும் விடிவெள்ளிதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.