இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உப்பு நீர் முதலைகள்!

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ளது பிதர்கனிகா தேசிய பூங்கா. முதலைகள் அதிகம் உள்ள பூங்கா இது. ஒவ்வோராண்டும் இந்தப் பகுதியில் வாழும் முதலைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :21 ஜூலை 2020, 12:30 am

ஜீ.சுடர்

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ளது பிதர்கனிகா தேசிய பூங்கா. முதலைகள் அதிகம் உள்ள பூங்கா இது. ஒவ்வோராண்டும் இந்தப் பகுதியில் வாழும் முதலைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு பிதர்கனிகா தேசிய பூங்கா உள்ள பகுதியில் 103 முதலை வாழிடங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. ஏறக்குறைய 1,757 முதலைகள் இங்கு உள்ளன.

நாட்டில் உள்ள உப்புநீரில் வாழும் முதலைகளின் மொத்த எண்ணிக்கையில் இது 70 சதவீதமாகும்.

முதலைகள் எந்த இடையூறுமில்லாமல் தங்கி இனவிருத்தி செய்து கொள்வதற்காக ஒவ்வோராண்டும் இந்த தேசிய பூங்கா மே 31- ஆம் தேதி முதல் ஜூலை 31- ஆம் தேதி வரை மூடப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா தொற்றின் காரணமாக இந்த தேசிய பூங்கா பகுதிக்கு மக்கள் வருவது நீண்ட நாள்களாகவே தடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ளதைப் போன்ற முதலைகள் மேற்கு வங்காளத்தின் சுந்தரவன காடுகளிலும், அந்தமான் நிகோபார் தீவுகளிலும் காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.