புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தலைவர் பதவியில் இருந்து நானே விலகிவிட்டேன் : நளினி

சமீபத்தில்தான்  தமிழ்த்திரையுலக தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் நடந்து ஓய்ந்த நிலையில், திடீரென தென்னிந்திய சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

News image
Updated On :17 நவம்பர் 2015, 12:29 pm

ஸ்ரீ

சமீபத்தில்தான்  தமிழ்த்திரையுலக தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் நடந்து ஓய்ந்த நிலையில், திடீரென தென்னிந்திய சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மீண்டும் அடுத்த மாதம் சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.  இது குறித்து தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து  விலகிய நடிகை நளினியிடம்  தொடர்பு கொண்டு பேசினோம்:

தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டீர்களாமே?

 உண்மைதான். சின்னத்திரை நடிகர் சங்கத்தில் ஆயிரத்து முன்னூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சர்வீஸ் செய்ய மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். சென்ற ஆண்டு எனது தலைமையில் போட்டியிட்ட அணி வெற்றிப் பெற்றது. நல்ல காரியங்கள் செய்ய முயற்சி எடுத்து வந்தோம். இதற்கிடையில் தெலுங்கில் எனக்கு இரு மெகா தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் மாதத்தில் இருபத்தைந்து நாட்கள் ஹைதராபாத்திலும், "சின்னப் பாப்பா பெரிய பாப்பா' தொடருக்காக ஐந்து நாட்கள் சென்னைக்கும் வந்து போய்க்கொண்டிருக்கிறேன்.  இப்படி சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும் மாறி மாறி பயணித்துக் கொண்டிருப்பதால் தலைவர் பதவியில் இருந்து கொண்டு சங்கத்திற்காக என்னால் முழுமையாக ஈடுபடமுடியவில்லை.  கூட்டத்திலும் அதிகம் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால், மற்றவர்கள் இருந்து நடத்தட்டுமே என்று நான் விலகிவிட்டேன்.  

தெலுங்கில் எப்படி உங்களுக்கு வரவேற்பு இருக்கிறது?

 கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல, சினிமா உலகில் இருப்பவர்களுக்கு எங்கு சென்றாலும் வரவேற்பு இருக்கிறது. மேலும் நடிப்பு என்பது மொழிகளைக் கடந்தது. அதற்கு உடல் மொழி மட்டுமே தேவை. நான் சினிமாவில் ஹீரோயினாக நடித்தப் போதே தெலுங்குப் பட உலகில் எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்த பிறகும் அது தொடர்கிறது. இரண்டு தொடர்களிலுமே எனக்கு நல்ல வேடங்கள், வித்தியாசமான வேடங்கள் கிடைத்திருக்கிறது. ஒவ்வோரு நாளும் இனிமையாக மக்களுடனே கழிகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

சின்னப் பாப்பா பெரியப் பாப்பா தொடரில் நடிப்பது பற்றி?

சின்னப்பாப்பா பெரிய பாப்பா ஒரு நகைச்சுவைத் தொடர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்தத் தொடரை விரும்பி பார்க்கிறார்கள். இரவு பத்துமணிக்கு தொடர் ஒளிப்பரப்பானாலும் காத்திருந்து பார்க்கும் ரசிகர்களும் இந்தத் தொடருக்கு உண்டு. அப்படி காத்திருந்து பார்க்கும் ரசிகர்களைத் திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே நகைச்சுவைக் காட்சிகளில் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் அழ வைக்கிற காட்சிகளில் சுலபமாக நடித்துவிடலாம். அந்தக் காட்சியின் சூழ்நிலையே பரிதாபத்தை வர வழைத்துவிடும். ஆனால், சிரிக்க வைக்கிற வேலை சாதாரண விஷயம் கிடையாது.  குறிப்பிட்ட நேரத்துக்குள் ரியாக்ஷனோடு நடிச்சிடனும். டைமிங் கொஞ்சம் மாறினாலும் காமெடி மொக்கையாகிவிடும்.

குடும்பத்துக்கு நேரம் செலவிட முடிகிறதா?

மகள் அட்வகேட். மகன் ஆடிட்டர்.  பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் அவர்கள் வாழ்க்கையை அவர்களே சிறப்பாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால், எந்த பாதிப்புமில்லாமல் என்னால் முழு அர்ப்பணிப்போடு நடிக்க முடிகிறது. வாழ்க்கைப் பயணமும் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.