சென்டிமென்ட் கதைகளைத்தான் அதிகமாக ரசிக்கிறார்கள். அழுகாச்சியாக இருந்தால் அவர்களும் சேர்ந்து அழுறாங்க. அந்த அளவுக்கு சீரியல்களில் நடிப்பதை உண்மையென்றே நினைக்கிறார்கள். அதாவது சீரியலை, சீரியல் என்று நினைப்பதில்லை. என்னை சந்திக்கும் நேயர்கள்கூட, உன்னை அந்த பையன் விட்டுட்டு போயிட்டானே எப்படி நீ வாழப்போறே என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு யாரும் சீரியலை, ஆக்டிங் என்று எடுத்துக்காமல் நிஜமென்று ஃபீல் பண்ணுகிறார்கள். என்னதான் டெக்னாலஜி அறிவு அதிகமாக இருந்தபோதும் இப்படித்தான் கேட்கிறார்கள். மேலும் எனது நிஜ பெயர் யாருக்குமே தெரியாது. நான் சமீபத்தில் நடிக்கும் கேரக்டரின் பெயரை சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.