பின்னணிப் பாடகியாகத் தன்னை உருவாக்கியதற்கு மலையாள இசையமைப்பாளர்கள் ரவீந்திரன், ஷ்யாம், ஜெர்ரி அமல்தேவ், சுன்னூர் ராமன், ஜான்சன் ஆகியோர் முக்கியமானவர்கள். அதேபோன்று தமிழில் ""நீ தானா அந்தக் குயில்'' பாடலின் மூலம் இசைஞானி இளையராஜா அறிமுகப்படுத்திய பின்னர் இதுவரை 15 ஆயிரம் திரைப்பாடல்கள் மற்றும் 4 ஆயிரம் தனிப்பாடல்கள் பாடியுள்ளதாக கூறும் சித்ரா, தென்னிந்தியாவில் 4 மாநில அரசிடமிருந்தும் விருது பெற்ற ஒரே பின்னணிப் பாடகி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். கேரள மாநில அரசிடமிருந்து மட்டுமே 16 முறை சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றுள்ளார். ஏ.ஆர்.ரகுமான், அனுமாலிக், சந்தீப் சவுடா, ராஜேஷ் ரோஷன் ஆகியோர் இசையமைப்பில் இந்தியிலும் பாடியுள்ளார்.