பெரிய ஆளா வருவேன்!
அந்தப் பெண், தான் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக வேண்டும் என்று விரும்பினாள். அவர்கள் குடும்பம் கிராமப்புறத்தில் வாழ்வது. அவளுடைய தந்தை சொன்னார், ""பெண்ணே அது முரட்டுத்தனமான விளையாட்டு, உனக்கு சரிப்பட்டு வராது'' என்று. ""அப்பா, நீங்க கொஞ்சமும் கவலைப்படாதீங்க, நான் இந்த விளையாட்டில் பெரிய ஆளா வருவேன்'' என்றார் பெண் உற்சாகத்துடன்.
மகளின் ஆர்வத்தைக் கண்ட தந்தை அவளுக்குத் தடை போடவில்லை. அவளை ஊக்குவித்தார். மகள் பங்கேற்கிற ஒவ்வொரு போட்டிக்கும் அவரும் உடன் சென்றார். அவளது வெற்றிகளைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி கொண்டார். அந்தப் பெண் அவளுடைய வீட்டுக்கும், ஊருக்கும் மட்டுமல்ல, நாட்டுக்கே பெருமை தேடித் தந்திருக்கிறாள்.
அவள்தான் எம்.சி. மேரிகோம் என்று அழைக்கப்படுகிற மாங்தே சுங்னிஜாங் மேரிகோம். இந்தியாவின் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீராங்கனை.
(சாதனைப் பெண்கள்' என்னும் நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.