உலக கலாசார திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கதக் நடனமும், அதைத் தொடர்ந்து எங்களது குழுவினரின் பரத நிகழ்ச்சியும் நடைபெற்றது. பரத நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆகியோர் கண்டு மகிழ்ந்தனர். மேலும், கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் கைதட்டி, ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைக் கண்ட போது இந்த நிகழ்ச்சிக்காக நான் மேற்கொண்ட அத்தனை உழைப்புக்கும் பரிசும் வெகுமதியும் கிடைத்ததாக உணர்ந்தேன். மேலும், இதுபோன்ற நிகழ்வை நடத்த முடியுமா என்று ஐயுற்ற எனக்கு , இந்த வரவேற்பு ஆச்சரியத்தையும், உவகையையும் அளித்தது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததை நினைக்கும்போது என் வாழ்வின் அளப்பரிய சாதனையாகக் கருதுகிறேன். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு நாட்டியக் கலைஞர்களின் ஒத்துழைப்பும், ஒற்றுமையும், இறை அருளும், குருஜியின் ஆசிர்வாதமும்தான் காரணம்.