மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாடகம் ஆன டிவிங்கிள் கன்னாவின் சிறுகதை

நடிகையும் எழுத்தாளருமான டிவிங்கிள் கன்னா எழுதிய "தி லெஜன்ட் ஆஃப் லட்சுமி பிரசாத்' என்ற சிறுகதை தற்போது நாடகமாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2017, 4:28 pm

அ. குமார்

நடிகையும் எழுத்தாளருமான டிவிங்கிள் கன்னா எழுதிய "தி லெஜன்ட் ஆஃப் லட்சுமி பிரசாத்' என்ற சிறுகதை தற்போது நாடகமாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஓர் இலையுதிர் காலத்தில் தன் வாழ்க்கையில் காதலைத் தேடிக் கொண்ட பெண்ணொருத்தி தன்னுடைய சுதந்திரத்தையும், பெண்ணியத்தையும் போற்றுவதற்காக எழுதப்பட்ட இந்த சிறுகதையைப் படித்த லில்லிட் துபே என்ற பெண் இயக்குநர் "சலாம் நானி துபே' என்ற பெயரில் அதை நாடகமாக அரங்கேற்றியுள்ளார். 
இந்த நாடகத்தில் தர்ஷன், ஜரிவாலா, ஜெயதி பாட்டியா, மெஹர்தார், ரிஷிகுரானா ஆகியோர் நடிக்கின்றனர்.
கடந்த ஒன்பதாண்டுகளாக நாடக நிறுவனத்தை நடத்தி வரும் லில்லிட் துபே கூறுகையில்," ஏற்கெனவே புத்தக விற்பனையில் சாதனைப் படைத்துள்ள டுவிங்கிள் கன்னாவின் சிறுகதைத் தொகுப்பு, நாடகமாக்கப்பட்ட பின் தொடர்ந்தாற்போல் ஏழு நகரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதுடன், லண்டன், சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், டாக்கா போன்ற நாடுகளிலிருந்தும் நாடகம் நடத்த அழைப்புகள் வந்துள்ளன. இதனால் டுவிங்கிள் கன்னாவும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் " என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.