தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சமையல் டிப்ஸ்...

ஈரம் பட்டு நமத்துப் போன அப்பளத்தை உளுத்தம்பருப்பின் மேல் வைத்து மூடிவிட்டால் அப்பளம் வெயிலில் உலர்த்தி எடுத்தது போலாகி விடும்.

Updated On :7 பிப்ரவரி 2017, 11:00 am

* ஈரம் பட்டு நமத்துப் போன அப்பளத்தை உளுத்தம்பருப்பின் மேல் வைத்து மூடிவிட்டால் அப்பளம் வெயிலில் உலர்த்தி எடுத்தது போலாகி விடும்.

* கறுப்பு உளுந்தில் தோசை மாவைப் புளிக்க வைக்கும் பாக்டீரியா அதிகமாகவும், தோல் நீக்கிய வெள்ளை  உளுந்தில் குறைவாகவும் உள்ளது. இதனால் மாவு புளிப்பதில் வேறுபாடு ஏற்படுகிறது.  எனவே தோலோடு கூடிய உளுந்தையே ஊற வைத்து தோல் நீக்கிப் பயன்படுத்தினால் பூ மாதிரி இட்லி கிடைக்கும்.  சுவையும் அதிகம்.
- நெ.இராமன்

* துருவிய முந்திரி, பொடியாக நறுக்கிய பிரட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் வெஜிடபிள்  சூப்பைச் சாப்பிட வெறுக்கும் குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடுவார்கள்.

* கிழங்கு வகைகளைப் பத்து நிமிஷம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து, பிறகு வேக வைத்தால் எளிதில் வெந்துவிடும். ருசியாகவும் இருக்கும்.

* காய்கறிப் பொரியல் மீதமாகி விட்டால்  சப்பாத்தி, அல்லது தோசையில் வைத்து உருட்டி ஸ்டஃப்டு சப்பாத்தி, தோசை செய்யலாம். அல்லது பொரியல் தேங்காய்த் துருவல் சேர்த்து பூரணமாகப் பிடித்தால் காரக் கொழுக்கட்டை தயார். 
- அமுதா அசோக்ராஜா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.