திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தெரிந்து கொள்வோம்! நோய்களை விரட்டும் கொய்யாப்பழம்!

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் அந்த நோய் நீங்கிவிடும்.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 10:51 am IST

* ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் அந்த நோய் நீங்கிவிடும்.

* மலச்சிக்கல் பிரச்னைத் தீர தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் போதும்.

* கொய்யப் பழத்தை கடித்துச் சாப்பிடுவதால் பற்களும், ஈறுகளும் பலம் பெறும்.

* கொய்யாப்பழத்தைச் சாலட் போன்று சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடையும்.

* கொய்யா இலைகளை அரைத்து புண், காயங்களின் மேல் தடவி வர விரைவில் அவை ஆறிவிடும். கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

* கொய்யாவில் கொழுப்பு இல்லாததால் பெருங்குடலை நச்சுத்தன்மையிலிருந்து காக்கிறது. ஆப்பிளை விட மிக அதிகமான சத்துக்கள் கொய்யாப் பழத்தில் உள்ளன. ஆரஞ்சு பழத்தோடு ஒப்பிட்டால் வைட்டமின் சி கொய்யாவில் நான்கு மடங்கு அதிகமாக உள்ளன. 

* கொய்யாப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் வலுப் பெறுவதோடு ரத்தமும் சுத்தமாகும்.

* கொய்யாவின் சிவப்பு நிறத்திற்கு காரணம் அதில் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளதுதான். அதுபோன்று கெய்யாப்பழத்தில் உள்ள லைகோமைன் மற்றும் கரோட்டினாய்டுகள் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.

* புகை - மதுப்பழக்கம் உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் நன்மை பெறலாம்.

* கொய்யாப்பழத்தைக் கழுவி தோலுடன் சாப்பிட்டு வர முகத்துக்குப் பொலிவையும் அழகையும் தருவதுடன் தோல் வறட்சியும், முதுமைத் தோற்றமும் நீங்கிவிடும்.

* நன்றாக பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு கலந்து உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள பித்தம், சோர்வு நீங்கும்.

* கொய்யா இலை போட்டு கொதிக்க வைத்த தேநீரை தொடர்ந்து 12 வாரங்கள் குடித்து வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாக குறையும்.

* கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து தலையில் பற்றுபோட்டு வந்தால் கடுமையான தலைவலியும் குறைந்துவிடும்.

* கொய்யாவின் இளம் தளிர் இலைகளைக் கழுவி மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் பாத்திரத்தில் கொதிக்க விடவும். பின்னர் குளிர வைத்து வாய்க் கொப்பளிக்க பயன்படுத்தலாம்.
- சி.ஆர்.ஹரிஹரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.