தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இதுபுதுசு

பெங்களூரில்  வசிக்கும்  கவிதா  கிருஷ்ணமூர்த்தி  ( வயலினிஸ்ட் எல்.சுப்ரமணியத்தின்  மனைவி)  கடந்த 30  ஆண்டுகளில்  அனைத்துத் திரைப்பட  இசையமைப்பாளர்களின்  இசையமைப்பில்  16 மொழிகளில்  18

News image
Updated On :13 பிப்ரவரி 2019, 1:26 pm IST

21-ஆம் நூற்றாண்டின் சிறந்த பாடகி!

பெங்களூரில் வசிக்கும் கவிதா கிருஷ்ணமூர்த்தி (வயலினிஸ்ட் எல். சுப்ரமணியத்தின் மனைவி) கடந்த 30  ஆண்டுகளில் அனைத்துத் திரைப்பட இசையமைப்பாளர்களின் இசையமைப்பில்  16 மொழிகளில்  18 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். சிறுவயதிலேயே பலராம்புரி என்பவரிடம் இந்துஸ்தானி சங்கீதம் பயின்று எட்டு வயதில் இசைப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இவருக்கு, 2005-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1994-96 ஆம் ஆண்டுகளில்  சிறந்த பின்னணி பாடகிக்கான பிலிம்பேர்  விருது பெற்ற இவர்,  இதுவரை பெற்ற விருதுகளுக்கு கணக்கே இல்லை. சமீபத்தில் 21-ஆம் நூற்றாண்டின் சிறந்த பாடகி  என்ற விருதும் இவருக்கு கிடைத்துள்ளது.
 

மன்னிப்பு கேட்க மறுத்த கங்கனா!


தான் நடித்து  இயக்கிய  "மணிகார்னிகா'  தி குயின்  ஆப் ஜான்சி' திரையிட்டபோது, ""எதிர்ப்பு  தெரிவித்தவர்களை  அழித்துவிடுவேன்'' என்று கூறியதற்காக  மன்னிப்பு கேட்கும்படி  கார்னிசேனா  கேட்டதற்கு,  ""என் மீது தவறு  ஏதும் இல்லாதபோது எதற்காக மன்னிப்பு  கேட்க வேண்டும்'' என்று கூறிய கங்கனா ரணாவத், சமீப காலமாக சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவுரைகளைக் கேட்டு நடந்து வருகிறாராம். ""இன்று நான் நல்ல நிலைமையில்  இருப்பதற்கு  என் குருநாதர்கள்தான் காரணம். என்னுடைய முதல் குருநாதர்  விவேகானந்தர்.  பின்னர்  யாரோ என்னை  அடைத்து வைத்தாற் போல் இருந்த நிலையிலிருந்து என்னை மீட்டவர்  சத்குரு ஜக்கி வாசுதேவ்'' என்கிறார்  கங்கனா.


சிறந்த நடிகையாக பெயரெடுக்க ஆசை!

புருவ  கண்ணசைப்பின் மூலம்   பிரபலமான  பிரியா பிரகாஷ்  வாரியார் நடித்துள்ள "ஒரு ஆதார்  லவ்'  என்ற மலையாளப் படம் நான்கு மொழிகளில் டப்பிங் செய்து  வெளியிடப்படவுள்ளது. கன்னடத்தில்  டப்பிங்  செய்யப்படும் முதல் மலையாளப் படம் இதுதான். ""சிறுவயதிலிருந்தே நடிகையாக வேண்டுமென்ற  ஆவலில் இருந்த எனக்கு  "ஒரு ஆதார் லவ்' படத்தில்  ஓரிரு காட்சியில்  தோன்றும்  வாய்ப்பு கிடைத்தது.  ஆனால்,  என்னுடைய  நடிப்பைப் பார்த்த இயக்குநர்  படம் முழுவதும் வரும்படி பாத்திரத்தை மாற்றினார். அனைத்து மொழிகளிலும்  நடித்து  சிறந்த நடிகை என பெயரெடுக்க வேண்டும் என்பது தான்  என் ஆசை''  என்கிறார்  பிரியா வாரியார்.


அஜித் படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்

மறைந்த  நடிகை  ஸ்ரீதேவியின்  கணவர் போனிகபூர், தமிழில்  தயாரிக்கும் "பிங்க்' ரீமேக் படத்தில் அஜித்  ஜோடியாக  வித்யாபாலனை அறிமுகப்படுத்துவதோடு,  இந்தியில்  தாப்சி  பன்னு நடித்த பாத்திரத்தில் ஸ்ரத்தா  ஸ்ரீநாத்தை ஒப்பந்தம்  செய்துள்ளார்.  ""அஜித்  படத்தில் நடிப்பதற்காக என்னை  நேரில் சென்னை  வரச் சொல்லி  ஒரு காட்சியில் நடிக்க வைத்த பின்  சில வாரங்கள் எந்த தகவலும் இல்லை.  மீண்டும்  என்னை வைத்து முக்கியமான  காட்சிகளை  எடுத்தவுடன், இயக்குநர்  வினோத்  ஒ.கே கூறிய பின்பே நான் அஜித்துடன்  நடிப்பது  உறுதியாயிற்று.  அதன் பின்னரே இந்த தகவலை  தயாரிப்பாளர் அனுமதியுடன்  வெளியிட்டேன்''  என்கிறார் ஸ்ரத்தா  ஸ்ரீநாத்.


அமெரிக்காவுக்கே திரும்பும் தனுஸ்ரீ தத்தா

""மும்பையில்  உள்ள என் பெற்றோரைப்  பார்ப்பதற்காகவே  நான் இந்தியாவுக்கு வந்தேன். 2009-  ஆம் ஆண்டு  வெளியான  "ஹார்ன்  ஒகே ப்ளீஸ்'  என்ற படத்தில்  நடித்தபோது  எனக்கேற்பட்ட  அனுபவத்தை   பற்றி கூறினேனே தவிர,  மீ.டு  என்ற சர்ச்சையை  தொடங்க வேண்டுமென்ற எண்ணம் ஏதும் எனக்கில்லை.  34 வயதாகும் எனக்கு  மீண்டும்  சினிமா வாய்ப்புக்காகவோ, விளம்பரத்திற்காகவோ இங்கு வரவில்லை. என் வாழ்க்கையில் ஏற்பட்ட இடைவெளியை  ஆன்மிக  சிந்தனைகள்  மூலம் நிரப்ப விரும்புகிறேன்''  என்று கூறும்  தனு ஸ்ரீ தத்தா, விரைவில்  அமெரிக்கா கிளம்பவுள்ளார்.


பாலிவுட்டில் மேலும் ஒரு வாரிசு நடிகை!

பாலிவுட்டில்  அறிமுகமாகியுள்ள  முன்னாள்  நடிக- நடிகையர் வாரிசுகள் சாரா அலிகான்.  ஜான்வி கபூர்,  அனன்யா   பாண்டே  ஆகியோரை  தொடர்ந்து,  பூஜா பேடியின் மகள் ஆலியாவும் திரைப்படங்களில் நடிக்க வந்துள்ளார். தன்னுடைய  நடன வீடியோவை சமூக வலைதளத்தில்  பதிவிட்டுள்ள ஆலியா, "ஜவானி ஜானேமன்'  என்ற படத்தில் சயீப்  அலிகானின்  மகளாக  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.