ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

டிப்ஸ்..  டிப்ஸ்..

பெண்​கள் சமை​யல் செய்​யும்​போது சூடான எண்​ணெய் பட்டு​விட்​டால் அந்த இடத்​தில் உரு​ளைக்​கி​ழங்​கைச் சிறிது அரைத்​துப் பூசுங்​கள். கொப்​ப​ளம் ஏற்படாது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN


பெண்​கள் சமை​யல் செய்​யும்​போது சூடான எண்​ணெய் பட்டு​விட்​டால் அந்த இடத்​தில் உரு​ளைக்​கி​ழங்​கைச் சிறிது அரைத்​துப் பூசுங்​கள். கொப்​ப​ளம் ஏற்படாது.

தேவைக்கு அதி​க​மாக இஞ்சி இருந்​தால் அதை மண்​ணில் புதைத்து வைத்து தண்​ணீர் விட்டு வையுங்​கள். தேவைப்​ப​டும் போது எடுத்து உப​யோ​கிக்​க​லாம். இஞ்சி காய்ந்து போகாது.

பாகற்​காய் சீக்​கி​ரம் பழுத்​து​வி​டும். இதைத் தவிர்க்க அதை இரண்​டி​ரண்​டாக நறுக்கி வைத்து விடுங்​கள்.

உரு​ளைக் கிழங்கை உப்​புக் கரைத்த நீரில் பதி​னைந்து நிமி​டங்​கள் ஊற வைத்​து​விட்​டுப் பிறகு அடுப்​பில் வைத்​தால் சீக்​கி​ரம் அது வெந்​து​வி​டும்.

முதல்​நாள் மாலை​யில் வாங்​கிய பூ ம​று​நாள் காலை வரை​யில் வதங்​கா​மல் இருக்க, பூவை ஈரத் துணி​யில் சுற்றி வைக்​கா​தீர்​கள். ஒரு பாத்​தி​ரத்தை நன்​றா​கக் கழு​வி​விட்டு அந்​தப் பாத்​தி​ரத்​திற்​குள் பூவை வைத்து மூடி​வை​யுங்​கள். பூ வா​டா​மல் வதங்​கா​மல் வைத்த மாதி​ரியே இருக்​கும்.

ஜாம் பாட்டி​லில் ஜாம் தீர்ந்து போனால் அதில் பாலை ஊற்​றுங்​கள். பாட்டி​லில் ஒட்டிக் கொண்​டி​ருக்​கும் ஜாம் பாலு​டன் கலந்து கரைந்​து​வி​டும். பிறகு அந்​தப் பாலை அருந்​தி​னால் சுவை​யாக இருக்​கும். ஜாம் வீணா​காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.