பெருந்தொந்தி பேராபத்து...

உடல் பருமனான பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள பலரும் தயங்குவதற்குக் காரணம், அவர்களையே அவர்களால் தூக்கிச் சுமந்து கவனித்துக் கொள்ள முடியாதபோது, நம்மை எங்கே கவனித்துக் கொள்ளப்
பெருந்தொந்தி பேராபத்து...

உடல் பருமனான பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள பலரும் தயங்குவதற்குக் காரணம், அவர்களையே அவர்களால் தூக்கிச் சுமந்து கவனித்துக் கொள்ள முடியாதபோது, நம்மை எங்கே கவனித்துக் கொள்ளப் போகிறார்கள் என்கிற பயம்தான் ஆண்களுக்கு! பெருந்தொந்தி வந்துவிட்டால் அதைக் குறைப்பது அவ்வளவு சுலபமல்ல. உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் அவசியம். கூடுமானவரை அரிசி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.


பெண்களின் உடல் பருமனுக்கும், தொப்பை விழுவதற்கும் காரணம் பல உண்டு. வயிற்றில் வாயு தேங்கி இருத்தல், அதிகம் உணவு உண்ணல், மாமிச உணவுகளைச் சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, பால், தயிர், வெண்ணெய், இனிப்புப் பண்டங்களை அதிகம் சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் உடனே சென்று உறங்குவது, அமர்ந்தபடி ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது நல்லதல்ல. நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்யாமை, பகலில் உறங்குவது, அடிக்கடி உண்பது, நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிடுவது, பிரசவத்திற்குப் பிறகு வயிற்றை இறுக்கிக் கட்டாமல் விடுவதால் வயிற்றில் காற்று புகுந்துவிடல், மன அழுத்தம், எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடுவதும் அப்படியே .

உடல் உழைப்பின்மை, சோம்பல், குளிர் பானங்களைக் குடித்தல், பீட்சா, பர்கர், முதலிய துரித உணவுகளை உண்பது - இவையெல்லாம்தான் தொப்பை வரக் காரணமாக இருக்கின்றன.

மேற்கூறிய அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மேலும், மருத்துவரின் ஆலோசனைப்படி சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

"கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்குக் எள்ளு' என்பது நம் தமிழர் பழமொழி. அதனால், உணவில் அதிக அளவு கொள்ளு ரசம், துவையல், சுண்டல் சமைத்து சாப்பிட ஊளை சதை குறையும். தொப்பையும் சீராகும். மேலும் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க உளைச் சதையையும் தொப்பையையும் குறைத்து ஒல்லியாகக் காட்சியளிக்கலாம்.

திப்பிலிப் பொடி, மிளகுப் பொடி, சீரகப்பொடி சம அளவு கலந்து வைத்துக்கொண்டு அரை தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வாரத்தில் இருமுறை சுரைக்காய் கூட்டு, பொரியல், குழம்பு சாப்பிடலாம்.

இஞ்சிச்சாறு நீர்விட்டுக் காய்ச்சி இறக்கிவைத்து தேன் கலந்து காலை மாலை ஆறு மாதங்கள் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை கூட்டு, பொரியல், குழம்பு வைத்து சாப்பிடலாம்.

பார்லிக் கஞ்சி வாரம் இருமுறை பருகவும்.

கோரைக்கிழங்கு பொடியில் தேன் கலந்து சாப்பிடவும்.

செம்பருத்திப் பொடியில் தேன் கலந்து சாப்பிடவும். மூன்று மாதங்கள் சாப்பிட இதயம் பலம் பெறுவதுடன், ரத்தம் சுத்தமாகும், தொப்பையும் குறையும்.

பீர்க்கங்காய்ச் சாற்றுடன் பெருங்காயம் சேர்த்து காய்ச்சிச் சாப்பிட வேண்டும்.

பூண்டைக் காய்ச்சி அதில் பால் கலந்து இரவு பருகவும்.

அன்னாசிப் பழச்சாறுடன் தேன் கலந்து பருகலாம்.

அருகம்புல் சாற்றுடன் தேன் கலந்து மூன்று மாதங்கள் சாப்பிட விரைவில் பலன் கிடைக்கும்.

நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் பாதஹஸ்தாசனம், பஸ்ஸிமோத்தாசனம், திரிகோணாசனம், புஜங்காசனம், தனூராசனம், பத்மாசனம் முதலிய யோகாசனங்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com