மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து குறுகிய காலத்தில் பிரபலமானவர்! 

ஜீ தமிழ் தொலைகாட்சியின் தொடர்களில் முதலிடத்தில் இருப்பது  "செம்பருத்தி' தொடர். இதில் அறிமுகமாகிய குறுகிய காலத்திலேயே  பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இந்த தொடரின் நாயகி பார்வதி. 

News image
Updated On :10 மார்ச் 2020, 3:03 pm

ஸ்ரீ

ஜீ தமிழ் தொலைகாட்சியின் தொடர்களில் முதலிடத்தில் இருப்பது  "செம்பருத்தி' தொடர். இதில் அறிமுகமாகிய குறுகிய காலத்திலேயே  பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இந்த தொடரின் நாயகி பார்வதி. இவரின் நிஜப்பெயர்   ஷபானா ஷாஜகான். 

இவரை செல்லம்மாக "ஷபு' என்றுதான் அழைக்கிறார்கள்.  இவரது பூர்விகம் கேரளா, ஆனால் படித்தது,  வளர்ந்தது எல்லாம் மகாராஷ்டிராவில்.  நடிப்பு பக்கம் வந்ததால் படிப்பை தொடர முடியாததால், சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில்  தொலைதூர கல்வி மூலமாக  பி.பி.ஏ  படித்துள்ளார்.  சிறு வயதிலேயே இவருடைய தந்தை காலமானதால்,  அம்மா மற்றும் தம்பியுடன்  வசித்து வருகிறார். 

இது குறித்து அவர் கூறுகையில், ஒரு மலையாள சீரியலில் நடித்தேன். அதன் தயாரிப்பு டீம் தமிழ்நாட்டுக்காரங்க. அவங்கமூலம்தான்  தமிழ் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. "நடிக்க முடியுமா?'னு கேட்டாங்க. உடனடியா ஒத்துகிட்டேன்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.