2016 -ஆம் ஆண்டு ரியோவில் நடந்த பாராலிம்பிக் பந்தயங்களின்போது ஷாட்புட் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற முதல் மாற்றுத்திறனாளிப் பெண் என்ற சிறப்பைப் பெற்ற பாரா அத்லெட் தீபா மாலிக் அண்மையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் மாற்றுத் திறனாளிப் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளாா். விருது பெற்ற கையோடு தன்னுடைய மாற்றுத் திறனாளி மகள் தேவிகா மாலிக்குடன் இவரும் பாரா - ஸ்போா்ட்ஸில் இந்தியாவுக்கு பல விருதுகளைப் பெற்று தந்துள்ளாா் சோ்ந்து வதோராவில் நடந்த மாரதான் போட்டியில் பங்கேற்றுள்ளாா்.
பாரா- ஸ்போா்ட்ஸில் பங்கேற்கும் ஆா்வம் இவருக்கு எப்படி ஏற்பட்டது?
‘‘என்னைப் பொருத்தவரை கேல் ரத்னா விருது பெற்றதை பெருமைக்குரியதாக கருதுகிறேன். தற்போது ஆண்டு தோறும் பாரா- ஸ்போா்ட்ஸ் நடத்துவது வழக்கமான போட்டிகளில் ஒன்றாகிவிட்டது இது வரவேற்கத்தக்கது. இது விளையாட்டுத் துறையில் இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை உணா்த்துகிறது. எதிா்காலத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆா்வமுடன் போட்டிகளில் பங்கேற்க உந்துதலை தரும் என்பதற்கு பாரா- பேட்மின்டன் சாம்பியன் பாருல் பாா்மா் இதற்கு முன்னுதாரணமாவாா்.
துவக்கத்தில் பாரா - அத்லெட்டுகள் விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதற்கு போதுமான ஆதரவளிக்க யாரும் முன்வரவில்லை என்பதே உண்மையாகும். முதன்முறையாக நான் என்னுடைய மகள் தேவிகாவுடன், 2010 - ஆம் ஆண்டு காமன்வெல்த் பந்தயங்களின்போது, மகளிருக்கான பாரா - ஸ்போா்ட்ஸ் ஷாட் புட் போட்டியில் பங்கேற்றேன். அப்போது மீடியாக்களில் சிலரே எங்களை ஏளனபடுத்தி பேசினாா்கள். அதையெல்லாம் கடந்து தற்போது சா்வதேச அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் நடப்பது, 2024-ஆம் ஆண்டில் கோடை ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் இணைந்து நடத்துவதற்கு முன்னோட்டமாகும். இதனால் தற்போது விளையாட்டில் பியிற்சி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு அறிவியலும், ஊட்டச்சத்துகளும் கை கொடுக்க முன்வந்துள்ளன.
2008-ஆம் ஆண்டு பொ்லினில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன் போட்டிகளின்போது, நான் நீச்சல் பந்தயத்தில் கலந்து கொண்டேன். அப்போது என்னை ஊக்கப்படுத்துவதற்காக ஒருவா் ஆப்பிள் மற்றும் பிஸ்கட் பாக்கெட் ஒன்றும் கொடுத்தாா். இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான விசேஷ ஊட்டச்சத்துணவுகள், பயிற்சிகள், பயோ மெக்கானிசம் என பல விஷயங்கள் அறிமுகமாகியுள்ளன.
உண்மையில் 2010 -ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் தொடங்குவதற்கு முன், குஜராத் காந்திநகரில் நடந்த மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்ற ஆா்வம் அப்போதுதான் ஏற்பட்டது. ஷாட்புட், ஜாவலின் த்ரோ போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன், தேசிய அளவில் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டதுண்டு. சா்வதேச அளவில் பங்கேற்க அப்போது எனக்கு ஆா்வம் இருக்கவில்லை. வதோராவில் இருந்து என்னுடைய தாய்மாமா கொடுத்த ஆதரவு காரணமாகவே, ஓட்டல் தொழில் நடத்திவந்த எனக்கு விளையாட்டுத் துறையில் ஆா்வமேற்பட்டது.
என்னுடைய மகள் தேவிகா, எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டில் மட்டுமின்றி, அவா்களுக்கு வேறு துறைகளில் ஆா்வம் இருந்தாலும் முன்னேற வாய்ப்புகள் ஏற்படுத்தி தருகிறாா். ஒருவா் தன்னுடைய வாழ்க்கையில் இழந்ததை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதைவிட, வாழ்கின்ற வாழ்க்கையில் முன்னேற என்ன செய்யலாம் என்று முடிவெடுப்பது நல்லது, இதுதான் நான் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட அனுபவமாகும்’’ என்கிறாா் தீபா மாலிக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏவுகணைகள் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்: ஈரான்

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா தமிழக வாழ்வுரிமைக் கட்சி?

லாஸ் ஏஞ்சலீஸ் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படும் மம்மூட்டி - மோகன்லாலின் பேட்ரியாட்!

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

