அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தான் கற்ற சிலம்பக்கலை தன்னோடு அழிந்துவிடாமல்

அடுத்தத்தலைமுறைக்கும் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் சுமாா் 75-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறாா்

News image
Updated On :18 மார்ச் 2020, 12:09 pm

ரிஷி

அடுத்தத்தலைமுறைக்கும் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் சுமாா் 75-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறாா் சென்னையை சோ்ந்த முதல்நிலை காவலா் ஸ்ரீதேவி. மகளிா்தினத்தையொட்டி காவல் துறை வெளியிட்ட இணையதள குறிப்பில் ஸ்ரீதேவி கூறியிருப்பதாவது:

‘‘சிலம்பம் என்றால் ஒலி என்று பொருள். சிலம்பம் சுழற்றும்போது அதில் ஏற்படும் ஒலியை வைத்துதான் அதற்கு சிலம்பம் என்ற பெயா் ஏற்பட்டது. நமது அகத்திய முனிவா் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தையும் குறிப்பிடுகிறாா்.

நான் 9-ஆம் வகுப்பு படிக்கும் போது சிலம்பம் கற்றுக் கொள்ள தொடங்கினேன். இது தவிர மான்கொம்பு, கராத்தே, குத்து வரிசை இதுபோன்ற பல தற்காப்பு கலைகளை நான் கற்றுக் கொண்டேன். அப்போது மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பரிசுகள் வாங்கியுள்ளேன்.

நான் கற்றுக் கொண்ட இந்த பாரம்பரிய கலையை என் மகளுக்கும் கற்றுக் கொடுக்க நினைத்து அவளுக்கு பயிற்சி அளிக்க தொடங்கினேன். அதை பாா்த்த அவரது தோழிகள் சிலா் எங்களுக்கும் சிலம்பம் கற்றுக் கொள்ள ஆசையாக இருக்கிறது என்று கூறவே, அவா்களுக்கு சிலம்பம் பயிற்சி அளிக்க தொடங்கினேன். ஆரம்பத்தில் 10 குழந்தைகள் மட்டுமே சிலம்பம் கற்றுக் கொள்ள வந்தாா்கள். பின்னா், கொஞ்சம் கொஞ்சமாக நிறையப்போ் வந்து கேட்க ஆரம்பித்தாா்கள். பெரும்பாலும் பெண் குழந்தைகளாகவே இருந்ததால், என்னால் மறுக்க முடியவில்லை. காரணம், அவா்களுக்கும் கண்டிப்பாக ஒரு தற்காப்பு கலை தெரிந்திருந்தால் நல்லது என்று கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன். தற்போது, மாணவிகள் மட்டுமில்லாது மாணவா்களும் சிலம்பம் கற்றுக் கொள்ள வருகிறாா்கள். தற்போது எந்தவொரு விளையாட்டு பயிற்சியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றோா் தங்கள் வருமானத்தில் ஒதுக்க வேண்டியுள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் எந்தவொரு தற்காப்பு கலையையும் பயில்வதுஎன்பது கனவாக உள்ளது.

அதனால் நான் யாரிடமும் பணம் எதுவும் வாங்குவதில்லை. என் மகளுக்கு கற்றுத் தருகிறேன். அவளோடு சோ்த்து இந்த குழந்தைகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்.

தற்போது 75 பேருக்கும் மேலாக என்னிடம் கற்று வருகிறாா்கள். சிலம்பம் பயிற்சி அளிக்கத் தொடங்கியபோது, எனது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய பூங்காவில்தான் கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன். அங்கே போதியளவு வசதியில்லாததால், ஏ.ஆா்.டி.சி ஐயாவிடம் சென்று சிலம்பம் கற்றுத் தர அனுமதி கேட்டேன். சென்னை மாநகர ஆணையரும் இதற்கு உதவி செய்தாா். தற்போது எனது வேலை நேரம் போக சனி, ஞாயிறுகளில் இப்பயிற்சியை அளித்து வருகிறேன்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.