அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆற்றில் கிடைத்த அதிர்ஷ்டம்!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தெற்கு பர்கானா மாவட்டத்தின் சுந்தரவன பகுதியில் வசிப்பவர் புஷ்பாகர் என்ற மூதாட்டி. இவர் சாகர் தீவுப் பகுதியில் மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டவர். 

News image
Updated On :14 அக்டோபர் 2020, 12:30 am

ரிஷி


மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தெற்கு பர்கானா மாவட்டத்தின் சுந்தரவன பகுதியில் வசிப்பவர் புஷ்பாகர் என்ற மூதாட்டி. இவர் சாகர் தீவுப் பகுதியில் மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டவர்.

சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் மீன் பிடிக்கச் சென்றபோது, மிகப்பெரிய மீன் ஒன்று ஆற்றில் மிதந்து வருவதைப் பார்த்தார். அதை கஷ்டப்பட்டு கரைக்கு இழுத்து வந்தார். இந்த மீன் அவரை லட்சாதிபதி ஆக்கப்போகிறது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

கரைக்கு வந்ததும், இதைக் கண்ட கிராமவாசி ஒருவர், "இது மிகவும் அரியவகையான "போலா' எனும் கடல் மீன் வகையைச் சேர்ந்தது. அந்த வழியாக சென்ற கப்பல் மோதி இந்த மீன் இறந்திருக்க கூடும், இறந்த நிலையில் கிடைத்ததால், இதனை உண்பதற்கு பயன்படுத்த முடியாது. இருப்பினும் மருத்துவ தேவைகளுக்கு இது பயன்படும். அதனால், சந்தைக்கு எடுத்து சென்று விற்றால் நல்ல விலைக்கு போகும்' என்று தெரிவித்துள்ளார்.

இதனால், அந்த மீனை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உள்ளூர் சந்தைக்கு எடுத்துச் சென்றுள்ளார் புஷ்பா . 52 கிலோ எடை கொண்டிருந்த அந்தமீன் ஒரு கிலோ 6,200 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு அவருக்கு 3 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது.

புஷ்பாகரிடம் கிடைத்த அந்த மீன் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் நல்ல விலைக்கு விற்பனையாகியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

""நீண்ட காலமாக, பொருளாதார நெருக்கடியால் தவித்து வந்த எனக்கு இந்த மீன் மூலம் இவ்வளவு பெரிய தொகை கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என தெரிவித்துள்ளார் புஷ்பாகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.