அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

2020- ஆசிய கல்வி விருது பெற்றவர்!

ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிய கல்வி மாநாட்டில் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களைக்  கண்டறிந்து விருது வழங்கி வருகிறார்கள்.

News image
Updated On :23 செப்டம்பர் 2020, 12:30 am

ரிஷி

ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிய கல்வி மாநாட்டில் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களைக் கண்டறிந்து விருது வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், 2020-ஆம் ஆண்டுக்கான விருதை சென்னை, ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள ஆல்பாபெட் பள்ளியின் நிறுவனரும் முதல்வருமாகிய கவிதா சராஃப் பெற்றுள்ளார். கற்பித்தலில் புதிய முயற்சிகளைக் கண்டறிந்து பணியாற்றி வருவதை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது:
""2009-ஆம் ஆண்டு இந்த ஆல்பாபெட் பள்ளி தொடங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் முழுமையான 1பி பள்ளிக் கூடமாக அங்கீகாரம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒவ்வொரு குழந்தையின் தனித்துவத்தை வெளிக்கொணரும் வகையில், அவர்களிடையே கற்றுக் கொள்ளும் தாகத்தை ஏற்படுத்தும் கல்விச் சூழலை உருவாக்கித் தருவதே இப்பள்ளியின் முக்கிய குறிக்கோள் ஆகும். வகுப்பறை சூழல் முதல் கற்பிக்கும் வழி
முறைகள் வரை அவ்வப்போது புது மாற்றங்களைப் புகுத்தி வருகிறோம். அதனால் ஒவ்வொரு குழந்தையும் முழு தன்னம்பிக்கை கொண்ட, தன்னிச்சையாக இயங்க தக்க தன்மானம் உடையவர்களாக மிளிர்வார்கள் என்று நம்புகிறோம். தற்போது கிடைத்துள்ள இந்த விருது எங்களை உற்சாகப்படுத்தியதோடு, குழந்தைகளின் எதிர்கால கல்விமுறை குறித்து இன்னும் கூடுதல் கவனத்தைச் செலுத்தத் தூண்டியுள்ளது'' என்கிறார் கவிதா சாரஃப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.