ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிய கல்வி மாநாட்டில் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களைக் கண்டறிந்து விருது வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், 2020-ஆம் ஆண்டுக்கான விருதை சென்னை, ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள ஆல்பாபெட் பள்ளியின் நிறுவனரும் முதல்வருமாகிய கவிதா சராஃப் பெற்றுள்ளார். கற்பித்தலில் புதிய முயற்சிகளைக் கண்டறிந்து பணியாற்றி வருவதை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது:
""2009-ஆம் ஆண்டு இந்த ஆல்பாபெட் பள்ளி தொடங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் முழுமையான 1பி பள்ளிக் கூடமாக அங்கீகாரம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒவ்வொரு குழந்தையின் தனித்துவத்தை வெளிக்கொணரும் வகையில், அவர்களிடையே கற்றுக் கொள்ளும் தாகத்தை ஏற்படுத்தும் கல்விச் சூழலை உருவாக்கித் தருவதே இப்பள்ளியின் முக்கிய குறிக்கோள் ஆகும். வகுப்பறை சூழல் முதல் கற்பிக்கும் வழி
முறைகள் வரை அவ்வப்போது புது மாற்றங்களைப் புகுத்தி வருகிறோம். அதனால் ஒவ்வொரு குழந்தையும் முழு தன்னம்பிக்கை கொண்ட, தன்னிச்சையாக இயங்க தக்க தன்மானம் உடையவர்களாக மிளிர்வார்கள் என்று நம்புகிறோம். தற்போது கிடைத்துள்ள இந்த விருது எங்களை உற்சாகப்படுத்தியதோடு, குழந்தைகளின் எதிர்கால கல்விமுறை குறித்து இன்னும் கூடுதல் கவனத்தைச் செலுத்தத் தூண்டியுள்ளது'' என்கிறார் கவிதா சாரஃப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் கைது

நீதிமன்றத்தை அணுகுவோம்: ஆம் ஆத்மி

சென்னை ஏரிகளில் 67 சதவீத குடிநீா் இருப்பு

மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் கருணை அடிப்படையில் 1,156 போ் நியமனம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


