மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கதம்பம்!

அண்மையில் சென்னை புது வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

News image
Updated On :7 ஏப்ரல் 2021, 11:01 am

காந்தி


திருநங்கைகள் இயக்கும் மெட்ரோ ரயில் நிலையம்!

அண்மையில் சென்னை புது வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த ரயில் நிலையத்தில் 10 திருநங்கைகளையும், 4 திருநம்பிகளையும் பணியமர்த்தி, மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமைப்படுத்தியுள்ளது. இவர்கள் டிக்கெட் விநியோகம், பயணிகளின் வெப்பநிலை அறிதல், டிக்கெட் பரிசோதனை, பொதுத் தளம், உதவி மையம், வாகன நிறுத்து தளம் என பணியாற்றி வருகின்றனர்.

திருநங்கைகளின் அமைப்பு மூலமாக, பட்டப்படிப்பை முடித்தவர்களின் பட்டியலில் இருந்து முதல் 14 நபர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் உதவியுடன், 20 நாட்கள் பயிற்சி (ள்ந்ண்ப்ப்
ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்) முதலில் வழங்கப்பட்டது. ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களும் இதில் கைகோர்த்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கினர். முக்கியமாக ஸ்போக்கன் இங்கிலீஷ், கணிப்பொறி அறிவு, பொதுமக்களிடம் பழகும் முறை போன்ற விஷயங்களுக்கான பயிற்சிகளை வழங்கியதுடன், பெரிஃபெரி (டங்ழ்ண்ச்ங்ழ்ழ்ண்) அமைப்பின் மூலம் சான்றிதழும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மெட்ரோ ஸ்டேஷன் பணிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. சென்னை மெட்ரோவுக்கு மேன்பவர் வழங்கும் கேசிசி நிறுவனம் மூலம் இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இரு பெண் தலைவர்கள்!

Story image

வடக்கு ஐரோப்பாவில் இருக்கும் எஸ்டோனியா என்கிற நாட்டில் முதன்முறையாகப் பெண் ஜனாதிபதியும், பெண் பிரதமரும் அந்நாட்டை ஆளத் தேர்வாகியுள்ளனர். காஜா கல்லாஸ் எஸ்டோனியாவின் முதல் பெண் பிரதமராகத் தேர்வாகி வரலாறு படைத்தார். மேலும், அந்நாட்டின் இளம் ஜனாதிபதியாக கெர்ஸ்டி கல்ஜுலைட் தேர்வாகிக் கூடுதல் பெருமை சேர்த்துள்ளார். இரு பெண்கள் ஆட்சி செய்யும் இந்நாட்டில், பல இளம் பெண்கள் இனி தைரியமாக தங்கள் கனவை நோக்கி பயணிப்பார்கள் என நம்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.