

தேவையானவை:
காலிஃப்ளவர் - 1
வெங்காயம் - 200 கிராம்
மிளகாய்ப் பொடி - 1தேக்கரண்டி
தனியாப் பொடி - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
பட்டை - 1தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
லவங்கம் - 2
பிரிஞ்சி இலை - 1
புதினா, கொத்துமல்லித் தழை - சிறிதளவு
தயிர் - 100 கிராம்
தேங்காய்ப்பால் - 100 கிராம்
எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி
கொண்டைக் கடலை - 250 கிராம்
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கொண்டைக் கடலையை ஊறவைத்து வேக வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் மசாலாப் பொருட்களைப் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் நறுக்கிய காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி போட்டு வதக்கி பிறகு புதினா, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். இத்துடன் எலுமிச்சைச்சாறு, தயிர் சேர்த்துக் கிளறி கெட்டியானதும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கலவை கெட்டியானதும் மல்லித் தழையைத் தூவி இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.