காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
தேங்காயை உடைத்தவுடன் கழுவிவிட்டு பின் பிரிட்ஜில் வைக்கவும். அப்போதுதான் தேங்காயில் பிசுபிசுப்பு இருக்காது.
அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும். டைனிங் டேபிளைத் துடைக்கும்போது ஒரு துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ûஸ ஒரு துளி பஞ்சில்விட்டு ஃப்ரீஸர் அல்லது ஃப்ரிஜ்ஜின் உள் மூலையில் போட்டு வைத்தால் துர்வாடை இருக்காது.
ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோ மணமாக இருக்கும்.
துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.