பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மழைக்காலத்தில் சருமப் பராமரிப்பு!

மழைக்காலம் தொடங்கியவுடன், நம்மைச் சுற்றிலும் பசுமையான சூழல் உருவாகிறது. மழை காலத்தின் போது வானிலை மாற்றங்கள் காரணமாக, நம் உடலில் சிறப்பு கவனம் செலுத்துப்பட வேண்டும்.

Published On :28 ஜனவரி 2024, 10:04 am IST

மழைக்காலம் தொடங்கியவுடன், நம்மைச் சுற்றிலும் பசுமையான சூழல் உருவாகிறது. மழை காலத்தின் போது வானிலை மாற்றங்கள் காரணமாக, நம் உடலில் சிறப்பு கவனம் செலுத்துப்பட வேண்டும். ஏனெனில், மழைக்காலத்தில் தோல் தொற்று மற்றும்  சருமம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது. எனவே, மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை, பராமரிக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களை பார்ப்போம்:

எண்ணெய் சருமத்திற்கு:

எண்ணெய்  சருமம் உள்ளவர்கள் பெரும்பாலும் மழைக்காலத்தில் தங்கள் சருமத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஏனெனில், எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு தோல் தொடர்பான சிக்கல்கள் அதிகமாக இருக்கிறது. எனவே, உங்கள் சருமம் எண்ணெய் சருமமாக  இருந்தால், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பருவமழையில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, வாரத்திற்கு இரண்டு முறையாவது முகத்தை ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதோடு, உங்கள் முக ஒப்பனையில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது நன்மையளிக்கிறது. மேலும், உங்கள் தோலில் ஜெல் சன்ஸ்கிரீமைப் பயன்படுத்த வேண்டாம்.

வறண்ட சருமத்திற்கு:

மழைக்காலம் தொடங்கியவுடன், வறண்ட சருமத்தில் தோல் தொடர்பான பிரச்சினைகள் தொடங்குகின்றன. எனவே, உங்கள் தோல் வறண்டிருந்தால் சருமத்தை சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த பருவத்தில் வறண்டத் தோலைப்  பராமரிக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். ஏனெனில், வறண்ட சருமத்திற்கு ஆரோக்கியமான நீரேற்றம் தேவைப்படுகிறது. (மேலும் படிக்க  தோல் தொற்றுநோயைத் தடுக்க வேம்பின் பயன்பாடு)

மென்மையான சருமத்திற்கு:

ஸென்ஸிடிவான சருமம் உள்ளவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம். ஏனெனில் இந்த வகை சருமத்தில் தோல் வறண்டதாகவுமில்லை, எண்ணெய் நிறைந்ததாகவுமில்லை. இதுபோன்ற சருமத்தில் பெரும்பாலும்  மூக்கு, கன்னம் மற்றும் நெற்றியில் அதிக எண்ணெய் இருக்கிறது. எனினும், முகத்தின் மற்ற பக்கங்களில் தோல் வறண்டு காணப்படுகிறது. இந்த வகை சருமத்திற்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது.எனவே, இந்த வகை சருமத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். மேலும், தோலில் சன்ஸ்கிரீமைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.