92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கதம்ப சுண்டல்

காராமணி, வேர்க்கடலை இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேகவிட்டு தனியே வைக்கவும்.

News image
Updated On :8 அக்டோபர் 2021, 12:23 pm

ஏ. காந்தி

தேவையானவை:

வெள்ளை காராமணி -  கால் கிண்ணம்
வேர்க்கடலை - அரை கிண்ணம்
இனிப்புச்சோளம் -  கால் கிண்ணம் 
(உதிர்த்தது)
தேங்காய்த்துருவல் - 4 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க:
கடலைப்பருப்பு - 2  தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி 
வரமிளகாய் - 3
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1  தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை -  1 ஈர்க்கு
பெருங்காயம் -  அரை தேக்கரண்டி

செய்முறை: 

காராமணி, வேர்க்கடலை இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேகவிட்டு தனியே வைக்கவும். உதிர்த்த இனிப்புச் சோளத்தை சிறிதளவு உப்பு சேர்த்து வேக விட்டுத் தனியே வைக்கவும். வாணலியில் 1  தேக்கரண்டி  எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து வைக்கவும். வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த காராமணி, வேர்க்கடலை, சோளம் இவற்றைச் சேர்த்து வதக்கி பொடித்த பொடியினைத்தூவி, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.